சென்னை: ‘நான் முதல்வர்’ திட்டம் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் நெகிழ்ச்சியுடன் பதிவுசெய்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் அவர் பதிவிட்டிருப்பதாவது: “நான் முதல்வன்” திட்டத்தின் மூலமாக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றிருக்கிறார்கள். இதனைக் கண்டு என் நெஞ்சம் பெருமிதத்தால் நிறைகிறது. நமது திராவிட மாடல் அரசு மெய்யாகவே நமது இளைஞர்களின் கனவுகளை நனவாக்கி வருகிறது. இத்தகைய வாய்ப்புகளை இறுகப் பற்றிக்கொண்டு, தத்தமது துறைகளில் மென்மேலும் புதிய உயரங்களை அடையுங்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.