முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கொள்கைக் கூட்டணிக்கு 40/40 தொகுதியிலும் வெற்றியைத் தேடித் தந்துள்ளனர்: அமைச்சர் உதயநிதி

சென்னை: தான் சந்தித்த 8 தேர்தல்களிலும் தொடர்ச்சியாக வென்று சாதனை படைத்திருக்கும் வெற்றி நாயகர் மு.க.ஸ்டாலின் வெற்றியை முத்தமிழறிஞர் கலைஞருக்குச் சமர்ப்பிப்போம் என அமைச்சர் உதயநிதிஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் அமைச்சர் உதயநிதிஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது; “2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கழகத் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கொள்கைக் கூட்டணிக்கு 40/40 தொகுதியிலும் வெற்றியைத் தேடித் தந்துள்ளனர் வாக்காள பெருமக்கள்.

கழகத்தின் சார்பிலும் இந்தியா கூட்டணி சார்பிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த வாக்காள பெருமக்களுக்கும், தேர்தல் வெற்றிக்காக உழைத்த கழக நிர்வாகிகள்-தொண்டர்கள்-கூட்டணி கட்சியினர் ஆகியோருக்கு என் அன்பும் நன்றியும்.

கழகத் தலைவராக, தான் சந்தித்த 8 தேர்தல்களிலும் தொடர்ச்சியாக வென்று, வரலாற்றுச் சாதனை படைத்திருக்கும் வெற்றி நாயகர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வெற்றியை, நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்குச் சமர்ப்பிப்போம்” என தெரிவித்துள்ளார்.

Related posts

பூக்களின் வரத்து அதிகரிப்பு மற்றும் விசேஷ நாள் இல்லாத காரணத்தால் மதுரையில் மல்லிகை பூ விலை சரிவு..!!

நான் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்குவதால் உண்மை மாறிவிடாது: ராகுல் காந்தி பேட்டி

மதுரை, கோவையில் அமைய உள்ள மெட்ரோ ரயில் திட்டம் குறித்து ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் நாளை ஆய்வு..!!