சென்னை: பொதுக்கூட்ட மேடையில் முதலமைச்சரை அவதூறாக பேசியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் அரூரில் கடந்த 16ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரை அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. திமுக மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணியின் மாவட்ட அமைப்பாளர் தொ.சந்திரசேகரன் உள்ளிட்டோர் போலீசில் புகார் அளித்தனர்.