மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக இன்று மாலை 3 மணிக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

    சென்னை: மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக இன்று மாலை 3 மணிக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். முதற்கட்டமாக விநாடிக்கு 12,000 கன அடி நீர் திறக்கப்பட உள்ளது. நீர்வரத்தை பொறுத்து நீர்திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும். அதிக அளவு நீர் வெளியேற்றப்படும் வாய்ப்புள்ளதால் கரையோரங்களில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தல்,உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

Related posts

தமிழன் தலைநிமிர்ந்து வாழ்வான் என்பதன் அடையாளம் நீங்கள்: அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

திரைத்துறையினர் மீதான பாலியல் புகார் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்ற தடை

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கப்பல் சேவையை தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு