சென்னை: மகளிர் உரிமைத்தொகையின் 2ம் கட்ட திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர்; கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகள் எண்ணிக்கை ஒரு கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300ஆக உயர்ந்துள்ளது. தொண்டை வலியை விட தொண்டில் தொய்வு ஏற்படக்கூடாது. 2-ம் கட்டமாக, மேல்முறையீடு செய்து தேர்வான பயனாளிகளுக்கும் ரூ.1000 வழங்கப்படுகிறது. உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் என்னால் மக்களை சந்திக்காமல் இருக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.