இதற்கான விழா நடைபெறும் இடமாக காஞ்சி பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி விளையாட்டு மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விழா முன்னேற்பாடு பணி துவங்கும்முகமாக நேற்று மாலை கால்கோள் விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் எம்எல்ஏ வக்கீல் எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு, பூஜைகளுடன் பணிகளை துவக்கி வைத்தனர். இதையடுத்து, பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மண் சமன்படுத்தும் பணி துவங்கியது. பின்னர், பந்தல் அமைக்கும் பணிகளும் துவங்கியுள்ளது.
200 அடி அகலமும் 500 அடி நீளமும் கொண்ட பிரமாண்டமாக 10 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் பந்தல் அமைக்கப்பட உள்ளது. விழாவிற்கு வரும் விஐபி வாகனங்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் வாகனங்கள் என பல்வேறு பகுதிகளில் வாகன நிறுத்தமிடம் அமைக்கப்பட உள்ளது. குடிநீர், கழிவறை வசதிகள் மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டு வருகிறது. விழாவில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், மாநகராட்சி கவுன்சிலர்கள் சந்துரு, சுரேஷ், கமலக் கண்ணன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிவசண்முகசுந்தரம், உதவி செயற்பொறியாளர்கள் சோம சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.