சென்னை: தமிழ்நாடு மக்கள் திமுக மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதையே
இடைத்தேர்தல் வெற்றி காட்டுகிறது. 3 ஆண்டு கால நல்லாட்சிக்கு கிடைத்த நற்சான்றிதழ்தான் இந்த மகத்தான வெற்றி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். வெற்றியை வழங்கிய விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.