சென்னை: கடந்த 1ஆம் தேதி, பெரவள்ளூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில், முதல்வர் பற்றி அவதூறாக பேசிய பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் கபிலனை கைது செய்தனர். இன்று காலையில், வியாசர்பாடியில் உள்ள கபிலனின் வீட்டிற்கு சென்று அவரை போலீசார் கைது செய்தனர். முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய புகாரில், பெரவள்ளூர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.