இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கவியரசு(37), கடந்த 27ம் தேதி குன்னம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். இதையடுத்து குன்னம் போலீசார் பத்ரி சேஷாத்ரி மீது, கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஆத்திரமூட்டல், வார்த்தைகள் மூலம் குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல், பொதுவில் அச்சத்தையும் எச்சரிக்கையையும் ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து தனிப்படையினர் நேற்று அதிகாலை 5 மணிக்கு சென்னை மயிலாப்பூரில் உள்ள பத்ரி சேஷாத்ரி வீட்டுக்கு சென்று அவரை கைது செய்து பெரம்பலூர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். மருத்துவ பரிசோதனைக்குப்பின் குன்னம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கவிதா முன் ஆஜர்படுத்தினர். நீதிபதி கவிதா அவரை வரும் 11ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து பத்ரி சேஷாத்ரியை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதை கண்டித்து பாஜகவினர் கோஷமிட்டனர்.