சென்னை : அண்ணல் மறைந்த இந்நாள், ஆதிக்க வல்லூறுகளுக்கு எதிராக நம் #INDIA ஒன்றுதிரள உறுதியேற்க வேண்டிய நாள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் தனது சமூகவலைத்தள பக்கத்தில், “உண்மை – அமைதி – மதநல்லிணக்கம் ஆகியவற்றை விரும்பிய அண்ணல் காந்தியார் அவர்களை இந்திய மண்ணில் நிலவும் பன்முகத்தன்மைக்கு எதிரான கருத்தியல் கொன்ற நாள் இது!காந்தியாரின் உயிரைத்தான் அந்த மனிதவிரோதக் கும்பலால் பறிக்க முடிந்ததே தவிர; அவர் நம்மிடையே விதைத்த சகோதரத்துவத்தை அல்ல!அண்ணல் மறைந்த இந்நாள், ஆதிக்க வல்லூறுகளுக்கு எதிராக நம் #INDIA ஒன்றுதிரள உறுதியேற்க வேண்டிய நாள்! இதனை #மதநல்லிணக்க_நாள் ஆகக் கடைப்பிடித்து, தமிழ்நாடு முழுவதும் கழகத்தினர், அனைத்துச் சமயங்களைச் சேர்ந்த பெரியோர், பொதுமக்கள் ஒன்றுதிரண்டு மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்றனர்.உறுதியேற்போம்… சமத்துவ இந்தியாவை உறுதிசெய்வோம்!, “என்று குறிப்பிட்டுள்ளார்.