சென்னை : குவைத் தீ விபத்து தொடர்பாக அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். குவைத் தீவிபத்தில் தமிழர்களின் நிலை குறித்து முதலமைச்சரிடம் அமைச்சர் விளக்கமளிக்கிறார். அயலகத் தமிழர் நலத்துறை எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விளக்கி வருகிறார்.