இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊரகப் பகுதிகளிலும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் மதுரை, தூத்துக்குடி, நாகை. வேலூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், முதல்வரின் முகவரித்துறை சிறப்பு அதிகாரி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஆலோசனையின் போது, திட்டத்தின் செயல்பாடுகள், கோரிக்கை மனுக்களின் நிலை, சிறப்பு முகாம்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும் மக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.