ஒன்றிய அரசின் குழுவினர் 4 மாவட்டங்களில் ஆய்வு செய்தனர். இது பெரும் பேரிடர் என்பதால் கூடுதல் நிதியை கோரியுள்ளோம். ஒன்றிய அரசின் நிதி வரட்டும் என காத்திருக்காமல் 4 மாவட்ட மக்களுக்கான இழப்பீட்டை அரசு அறிவித்தது.ஒன்றிய அரசின் நிதியை முழுமையாக பெற்றால்தான் முழுமையான நிவாரண பணிகளை மேற்கொள்ள முடியும். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. வரலாற்றில் இதுவரை பதியப்படாத அளவுக்கு மழைப்பொழிவு பதிவாகி இருந்தது.ஒராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரேநாளில் கொட்டித் தீர்த்ததை நீங்கள் எல்லாம் அறிவீர்கள்.
கனமழைக்கான வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை சற்று தாமதமாகவே கிடைத்தது. வானிலை மையம் கணித்ததை விட பல மடங்கு கூடுதல் மழை பெய்துள்ளது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு காயல்பட்டினத்தில் 95 செ.மீ. மழை பெய்துள்ளது. தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ராணுவ வீரர்கள், பேரிடர் மீட்புப்படையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.வெள்ள நீர் சூழ்ந்த பகுதியில் உள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.தென் மாவட்டங்களில் 8 அமைச்சர்கள், 10 ஆட்சி அலுவலர்கள் மீட்பு பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்,”என்றார்.