பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாட்சியங்கள் என பெயர் மாற்றம் செய்வது மொழி ஏகாதிபத்தியத்தை காட்டுவதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இனிமேல் தமிழ் என்ற வார்த்தையைக்கூட உச்சரிக்க பிரதமருக்கு தார்மீக உரிமை இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்திய ஒற்றுமை என்ற அடித்தளத்துக்கு விரோதமானது ஒன்றிய பாஜக அரசின் செயல் என்று தெரிவித்துள்ளார். இந்தி மூலம் நமது அடையாளத்தை மாற்ற முயற்சிக்கும் பாஜகவின் செயலை வீழ்த்துவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.