எங்களுக்கு வாக்களித்தோர் மட்டுமின்றி வாக்களிக்காத மக்களும் மகிழ்ச்சி அடையும் வகையில் ஆட்சி நடத்தி வருகிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: எங்களுக்கு வாக்களித்தோர் மட்டுமின்றி வாக்களிக்காத மக்களும் மகிழ்ச்சி அடையும் வகையில் ஆட்சி நடத்தி வருகிறோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். அப்போது; கொளத்தூர் தொகுதிக்கு ஒவ்வொரு முறை வரும்போதும் புத்துணர்வு பெறுகிறேன். என்னை தேர்வு செய்த தொகுதி கொளத்தூர். எங்களுக்கு வாக்களித்தோர் மட்டுமின்றி வாக்களிக்காத மக்களும் மகிழ்ச்சி அடையும் வகையில் ஆட்சி நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு மட்டும் ரூ. 11,233 கோடியில் 788 பணிகளை செயல்படுத்த உள்ளோம்.

உங்கள் தொருதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 1,896 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதால் அவற்றின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. எங்களுக்கு வாக்களிக்காத மக்களும் மகிழ்ச்சியடையும் படி பணிபுரிந்து வருகிறோம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படுகிறது. மகளிர் உரிமைத்தொகையை ஒரு நாளைக்கு முன்பே உரியவர்களுக்கு தந்துள்ளோம். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டியுள்ளார் இவ்வாறு கூறினார்.

Related posts

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

மிலாடி நபியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால்