ஈகிள் பிரஸ் நிறுவனர் பிரதாப் சிங் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

சென்னை: ஈகிள் பிரஸ் நிறுவனர் பிரதாப் சிங் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட இரங்கல் அறிக்கை: ஈகிள் பிரஸ் நிறுவனர் பிரதாப் சிங் மறைந்தார் என்ற செய்தி கேட்டு வருந்தினேன். கலைஞரோடும் எங்கள் குடும்பத்தோடும் நட்பு பாராட்டிய அவரது இழப்பு வேதனை தருகிறது.

பேரறிஞர் அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தமிழ் ஆளுமைகளின் நூல்களை வெளியிட்டுப் பூம்புகார் பதிப்பகத்தைத் தமிழ்க் கருவூலமாக நடத்தியவர் பிரதாப் சிங். அவரது பிரிவால் வாடும், குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மகனும், இனிய நண்பருமான ராஜா சுந்தர்சிங்கிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்டேன்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு