புதுடெல்லி: இந்தியாவின் உளவுத்துறை தலைவர் தபான் குமார் தேக்காவுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இமாச்சலபிரதேசம் கேடரில் 1988ல் தேர்வான ஐபிஎஸ் அதிகாரி தபான்குமார் தற்போது உளவுத்துறை தலைவராக இருந்துவருகிறார். வருகிற 30ம் தேதி அவர் ஓய்வு பெற வேண்டும். அவருக்கு மேலும் ஓராண்டு, அதாவது 2025 ஜூன் வரை பதவி நீட்டிப்புசெய்து ஒன்றிய பணியாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.