மக்களவையில் அவரது குரல் தொடா்ந்து வலிமையாக ஒலிக்கட்டும் என்று வாழ்த்தி இருந்தார். இத்தகைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, நன்றி எனது அன்புச் சகோதரர் ஸ்டாலின் அவர்களே. தெற்கில் இருந்து வடக்கு வரை இந்தியாவின் ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் ஒலிப்பதை உறுதி செய்வோம். நமது அரசமைப்பில் குறிப்பிட்டுள்ளபடி கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவோம். இவ்வாறு ராகுல்காந்தி எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டிருந்தார்.