சிதம்பரம் நடராஜர் கோயில் திருமஞ்சன விழாவில் பக்தர்கள் கனகசபை மீது தரிசனம் செய்யும் அரசாணைக்கு தடை விதிக்கப்படவில்லை: சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம்

சென்னை: சிதம்பரம், நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழாவின் போது, கனகசபை மீது பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளிக்கும் அரசாணைக்கு எந்த தடையும் விதிக்கப்படாத நிலையில், விதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாமென அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம், நடராஜர் கோயிலில், நாளை முதல் மூன்று நாட்கள் ஆனி திருமஞ்சன விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது பக்தர்கள், கனகசபை மீது நின்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க கோரி சம்பந்தமூர்த்தி ராமநாதன் என்பவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கனகசபை மீது நின்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதித்த அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கனகசபையில் நின்று தரிசனம் செய்ய அனுமதிக்கும் அரசாணைக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. விதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம். சட்டத்தை கையில் எடுப்பவர்களுக்கு எதிராக அறநிலையத்
துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். தங்கள் கோரிக்கை தொடர்பாக அதிகாரிகளுக்கு மனுதாரர் விண்ணப்பம் அளிக்கலாம். இந்த விவகாரம் தொடர்பாக அறநிலைய துறை அடுத்த வாரம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

 

Related posts

டெல்லியில் நாளை இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்பு

நிதிநிலை அறிக்கை கூட்டணிக் கட்சிகளை சமாதானப்படுத்தும் சலுகை அறிவிப்புகளாக மட்டுமே அமைந்துள்ளது வெட்கக்கேடானது: சீமான் கண்டனம்

இந்தியா கூட்டணி எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் தொடங்கியது