கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் விழாவின் 9 நாள் நிகழ்வான தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. விநாயகர், முருகன், நடராஜர், சிவகாமசுந்தரி, சண்டிகேஸ்வரர் உள்ளிட்டோர் தனித்தனி தேரில் எழுந்தருளினர்.