பின்னர் அவர் சத்தம் போட்டதும் ஊர் மக்கள் அங்கு திரண்டு வேடிக்கை பார்த்தனர். உடனடியாக அப்துல்ரஷீத் சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பெயரில் அங்கு சென்ற வனத்துறையினர் கிராம மக்கள் உதவியுடன் முதலையை பத்திரமாக மீட்டனர்.
அந்த முதலை 8 அடி நீளமும், 110 கிலோ எடையும் இருந்தது. பின்னர் வனத்துறையினர் வக்கரமாரி ஏரியில் முதலையை பாதுகாப்பாக எடுத்து சென்று விட்டனர். அதிகாலையில் வீட்டுக்குள் முதலை புகுந்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.