சென்னை: சிதம்பரம் கோயிலில் கனகசபையில் பக்தர்கள் தரிசிக்க அனுமதித்து அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடைக் கோரி சென்னையை சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். கோயிலின் வழிபாட்டு முறைகளில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதால் அரசாணை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி மனுதக்கல் செய்துள்ளார்.