மும்பை: கடந்த 24 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் கும்பலை சேர்ந்த சிறைைகதி சபீர் பர்க்கத்அலி லக்கானி (59) நேற்று மும்பை கிரைம் பிராஞ்ச் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த 1994ல் மும்பை செம்பூர் சிந்தி கேம்ப் பகுதியில் உள்ள கட்டுமான புரோக்கர் அலுவலகத்தில் சோட்டா ராஜன் கும்பலை சேர்ந்த சபீர் பர்க்கத் அலி உள்ளிட்ட 5 பேர் ஆயுதங்களை காட்டி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது ரோந்து வந்த போலீசை தாக்கிவிட்டு தப்பி ஓடினர்.
அந்த வழக்கில் அவர்களுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களில் லக்கானி மற்றும் இன்னொருவர் 1995ல் சிறையிலிருந்து தப்பி தலைமறைவாயினர். போலீசார் அவர்களை தேடி வந்த நிலையில் லக்கானி மும்பை ஆன்டாப் ஹில் பகுதியில் உள்ள ரகசிய தகவல் நேற்று போலீசுக்கு கிடைத்தது. உடனே அங்கு விரைந்த போலீசார் அவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.