சட்டீஸ்கர் சபாநாயகர் தேர்தல் ராமன்சிங் மனுதாக்கல்

ராய்பூர்: சட்டீஸ்கரில் அண்மையில் நடந்து முடிந்த பேரவை தேர்தலில் பாஜ வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. விஷ்ணு தேவ் சாய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். சட்டீஸ்கர் சட்டப்பேரவை கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் சட்டீஸ்கர் பேரவையின் சபாநாயகர் பதவிக்கு பாஜவை சேர்ந்த முன்னாள் முதல்வர் ராமன்சிங் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வேறுயாரும் மனு தாக்கல் செய்யாததால் ராமன்சிங் புதிய சபாநாயகராவது உறுதியாகி உள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராமன்சிங், “சட்டப்பேரவையில் அனைவரையும் ஒருங்கிணைத்து அழைத்து செல்வதே என் நோக்கம். எனக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் கட்சியினருக்கு என் நன்றி” என்று கூறினார்.

Related posts

டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு பில்

அங்கீகாரமற்ற செவிலியர் பயிற்சி பள்ளியில் சேர வேண்டாம்: நர்சிங் கவுன்சில் எச்சரிக்கை

ஜம்மு காஷ்மீர் மக்களிடமிருந்து மாநில உரிமையைப் பறித்தவர்களுக்கு பாடம் புகட்ட இதுவே கடைசி வாய்ப்பு: மல்லிகார்ஜுன கார்கே