அப்போது கண்ணி வெடிகளுடன் இணைக்கப்பட்ட ஒரு கம்பியை கண்டனர். இதையடுத்து வெடிகுண்டை தேட முயன்றபோது பூமிக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி வெடித்தது. இதில் பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் காயமடைந்தனர். 5 பேரும் பிஜப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.