இதையடுத்து அதிரடிப்படை(எஸ்ஐடி),எல்லை பாதுகாப்பு படை(பிஎஸ்எப்) மற்றும் மாவட்ட ரிசர்வ் படையினர் அபுஜ்மாத் பகுதிக்கு நேற்று அதிகாலை விரைந்தனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நிகழ்ந்தது. இதில்,3 பெண் நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களுடைய உடல்களுக்கு அருகே ஏராளமான ஆயுதங்கள் கிடந்தன. தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.