இசட் பிரிவு பாதுகாப்பு கேட்கும் சட்டீஸ்கர் பாஜ நிர்வாகிகள்

பிஜப்பூர்: சட்டீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் கடந்த ஒன்றாம் தேதி பாஜவை சேர்ந்த தலைவர் திரிபாதி கட்லா திருமணத்துக்கு சென்றபோது நக்சல்களால் கொல்லப்பட்டார். இதேபோல் கடந்த 6ம் தேதி மற்றொரு தலைவரான கைலாஷ் நாக் கொல்லப்பட்டார். இந்நிலையில் பாஜ மாவட்ட பிரிவு தலைவர் ஸ்ரீனிவாஸ் முதலியார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

இந்த கடிதத்தில்,‘‘பிஜப்பூரில் பாஜ அலுவலக பணியாளர்கள் மற்றும் தொண்டர்கள் மீது நக்சல் தாக்குதல் அச்சுறுத்தல் அதிகமாக இருக்கிறது. எனவே நக்சல்கள் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால் பாஜ மாவட்ட பிரிவை சேர்ந்த 9 பேருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும்”என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

Related posts

உத்திரமேரூரில் திரவுபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

மீண்டும் முதல் மனைவியுடன் வாழ ஆசைப்பட்டு 2வது மனைவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவரிடம் போலீசார் விசாரணை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆலோசனை கூட்டம்: கார்ப்பரேட் வர்த்தகத்தை அரசுகள் தடை செய்யவேண்டும்: தீர்மானம் நிறைவேற்றம்