சூரஜ்பூர்: சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக இருந்த மோகன் மார்க்கம் மாற்றப்பட்டு புதிய தலைவராக தீபக் பைஜ் எம்பி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கல்வி அமைச்சராக இருந்த பிரேசம் சாய் நேற்று பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது பற்றி பிரேம் சாய் கூறுகையில்,‘‘ காங்கிரஸ் மேலிடத்தின் உத்தரவின் பேரில் ராஜினாமா செய்தேன் ’’ என்றார். மோகன் மார்க்கம் அமைச்சராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.