டெல்லி: கரீப் கல்யாண் உணவுத்திட்டம் மேலும் 5 ஆண்டு நீட்டிக்கப்படும் என பிரதமர் அறிவித்தது தேர்தல் நடத்தை விதிமீறல் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கும்போது பிரதமர் அறிவித்தது விதிமீறல். பிரதமர் அறிவிப்பு குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா என்று அவர் கூறினார்.