செட்டிநாடு உருளைக்கிழங்கு ரோஸ்ட்

தேவையான பொருட்கள்:

பேபி உருளைக்கிழங்கு – 1 1/2 கப் (வேக வைத்து,தோலுரித்தது)
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
சீரகம் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
புளிச்சாறு – டேபிள் ஸ்பூன்
வெல்லம் – 1 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – தேவையான அளவு

செட்டிநாடு மசாலாவிற்கு

மல்லி விதை – 1 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
பட்டை – 1 இன்ச்
ஏலக்காய் – 1
கிராம்பு – 4
வரமிளகாய் – 4
துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

முதலில் பேபி உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு, உருளைக்கிழங்கு மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.விசில் போனதும் குக்கரைத் திறந்து நீரை வடிகட்டிவிட்டு, உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் செட்டிநாடு மசாலாவிற்கு கொடுத்துள்ள மல்லி, கறிவேப்பிலை, வரமிளகாய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து, பின் துருவிய தேங்காயை சேர்த்து 2 நிமிடம் வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.பிறகு அதில் வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.பின் அதில் தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.அடுத்து வேக வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து 10 நிமிடம் கிளறி வேக வைத்து, அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கிளறி, நீர் வற்றும் வரை வேக வைக்க வேண்டும்.இறுதியாக வெல்லம், புளிச்சாறு மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, 2-3 நிமிடம் கிளறி இறக்கினால், சுவையான செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு ரோஸ்ட் தயார்.

Related posts

பீர்க்கங்காய் துவையல்

குதிரைவாலி இனிப்பு ஆப்பம்

சிவப்பு சோள அடை