இதையடுத்து, பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், X சமூக வலைத்தளத்தில் பிரக்ஞானந்தாவிற்கு மஹிந்திரா தார் SUV காரை பரிசளிக்க வேண்டும் என ஆனந்த்மஹிந்திராவிடம் வேண்டுகோள் வைத்து வர, அவர் அதை கவனித்து, தனக்கு பிரக்ஞானந்தாவிற்கு பரிசு வழங்குவதை காட்டிலும் வேறு ஒரு எண்ணம் உள்ளது என்று தனது X பக்கத்தில் இன்று கூறியுள்ளார்.
பிரக்ஞானந்தாவின் செஸ் சமந்தமான கணவிற்கு பக்கபலமாக இருந்த அவரின் தாய் நாகலட்சுமி, தந்தை ரமேஷ் பாபு ஆகியோர்க்கு தனது நன்றிகளை சொல்லும் வகையில் XUV 400 மின்சார காரை பரிசாக வழங்க தான் எண்ணுவதாக தனது X பக்கத்தில் இன்று கூறியுள்ளார். மேலும் அவர் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு செஸ் விளையாட்டை அறிமுகப்படுத்தி அதில் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் இந்த பதிவில் கூறியிருந்தார். ஆனந்த் மஹிந்திராவின் பரிசுக்கு பலரும் வாழ்த்தும் நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.