தமிழ்நாட்டை சேர்ந்த சதுரங்க வீரர் பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு மின்சார காரை பரிசளிக்கிறேன்: ஆனந்த் மஹிந்திரா டிவீட்

சென்னை: உலக கோப்பை சதுரங்க போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீரர் பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு மின்சார காரை பரிசளிப்பதாக மஹேந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார். அசர்பைஜானில் நடந்த உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச் சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீரர் மேக்னஸ் கார்ல்சனை, இந்திய வீரர் பிரக்ஞானந்தா எதிர்கொண்டார். சாம்பியன் பட்டத்தை மேக்னஸ் கார்ல்சன் வென்றாலும், அவரை தனது சாமர்த்தியமான காய் நகர்த்தல்களால் பிரக்ஞானந்தா திணறச் செய்தார்.

இதையடுத்து, பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், X சமூக வலைத்தளத்தில் பிரக்ஞானந்தாவிற்கு மஹிந்திரா தார் SUV காரை பரிசளிக்க வேண்டும் என ஆனந்த்மஹிந்திராவிடம் வேண்டுகோள் வைத்து வர, அவர் அதை கவனித்து, தனக்கு பிரக்ஞானந்தாவிற்கு பரிசு வழங்குவதை காட்டிலும் வேறு ஒரு எண்ணம் உள்ளது என்று தனது X பக்கத்தில் இன்று கூறியுள்ளார்.

பிரக்ஞானந்தாவின் செஸ் சமந்தமான கணவிற்கு பக்கபலமாக இருந்த அவரின் தாய் நாகலட்சுமி, தந்தை ரமேஷ் பாபு ஆகியோர்க்கு தனது நன்றிகளை சொல்லும் வகையில் XUV 400 மின்சார காரை பரிசாக வழங்க தான் எண்ணுவதாக தனது X பக்கத்தில் இன்று கூறியுள்ளார். மேலும் அவர் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு செஸ் விளையாட்டை அறிமுகப்படுத்தி அதில் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் இந்த பதிவில் கூறியிருந்தார். ஆனந்த் மஹிந்திராவின் பரிசுக்கு பலரும் வாழ்த்தும் நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு