இந்த பேக்டரி கடந்த 2008 முதல் செயல்படுகிறது. இவர்கள், கடந்த 2021 முதல் சென்னை துறைமுகத்திற்கு வாடகை செலுத்தவில்லையாம். ரூ.38 லட்சம் வாடகை பாக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 28ம்தேதி துறைமுக மேலாண்மை குழு சிஇஓ துரை மாணிக்கம் தலைமையிலான அதிகாரிகள் சவுமியா பெயரில் உள்ள ஐஸ் பேக்டரிக்கு சீல் வைக்க ஊழியர்கள் சிமென்ட் செங்கல் கொண்டு வந்தனர். இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாமகவினர், அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், முதல் தவணையாக ரூ.5 லட்சம் செலுத்தினர். பின்னர், 10 நாட்கள் அவகாசம் கேட்டு மீதமுள்ள ரூ.33 லட்சத்தை கட்டிவிடுவதாக கூறியிருந்தனர். ஆனால் மீதமுள்ள வாடகை பாக்கியை இது வரை செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், அன்புமணி ராமதாஸின் மனைவி சவுமியா பெயரில் உள்ள ஐஸ் பேக்டரி சீல் வைக்க துறைமுக மேலாண்மைக்குழு சிஇஓ துரைமாணிக்கம் தலைமையிலான அதிகாரிகள் இன்று வந்தனர். சிமென்ட் செங்கல் வைத்து கட்டி ஐஸ் பேக்டரிக்கு சீல்வைத்தனர். இந்த சம்பவத்தால் காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.