சென்னை: சென்னை துறைமுகத்தில் ரூ.35 கோடி மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் இருந்த கன்டெய்னர் திருட்டில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்துள்ளனர். சீனாவில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்ட கன்டெய்னர் திருடி உள்ளனர். டிரெய்லர் லாரி உரிமையாளர் மணிகண்டன், லாரிகள் ஏற்பாடு செய்யும் இடைத்தரகர்கள் ராஜேஷ், நெப்போலியன், சிவபாலன், முத்துராஜ், ஓட்டுனர் பால்ராஜ் ஆகியோர் கைது செய்துள்ளனர்.