சென்னை: பொதுமக்களின் நலன் கருதி சொத்துவரி, தொழில் வரி மற்றும் நிறுமவரி செலுத்துவதற்காகவும், தொழில் உரிமம் புதுப்பித்தலுக்காகவும் பெருநகர சென்னை மாநகராட்சி வருவாய்த்துறையானது 29.03.2024 (வெள்ளிக்கிழமை), 30.03.2024 (சனிக்கிழமை) மற்றும் 31.03.2024 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய பொது விடுமுறை நாட்களில் இயங்கும். எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.