இந்நிலையில், கடந்த சில நாட்களாக ரூ.75க்கு பதிலாக ரூ.150 வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும், அரைமணி நேரத்துக்கு மேலாகும்போது அந்த வாகனங்களுக்கு ரூ.225 கட்டணம் பாஸ்டேக் மூலம் வசூலிக்கப்படுவதாக விமானப் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டால் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் அவதூறாகவும் மிரட்டும் தொனியில் தரக்குறைவாகவும் பேசுவதாக விமான பயணிகள் கூறுகின்றனர்.சென்னை விமானநிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘இது சம்பந்தமாக ஏற்கனவே ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பார்க்கிங் மற்றும் பிக்கப் பாயின்ட்டில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என தனியார் ஒப்பந்த நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தகுந்த ஆதாரங்களுடன் புகார் தெரிவித்தால், அக்கட்டணத்தை திருப்பி கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தனர்.