சென்னை: சென்னையில் வாகனங்கள் செல்ல வேண்டிய அதிகபட்ச வேக அளவை நிர்ணயிக்க சென்னை போக்குவரத்து காவல்துறை நிபுணர் குழுவை அமைத்துள்ளது. சென்னையில் பகல் நேரத்தில் 40 கிலோ மீட்டர், இரவில் 50 கிலோ மீட்டர் வேகத்தை விட அதிக வேகத்தில் சென்றால் தானியங்கி தொழில்நுட்ப முறையில் வழக்குபதியும் திட்டம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு எழுந்ததால் தற்காலிகமாக திட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் அதிகபட்ச வேக அளவை மாற்றியமைக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் ஐஐடி பேராசிரியர், போக்குவரத்துத் துறை அதிகாரி, பொது போக்குவரத்து நிபுணர் உள்ளிட்டோர் இடம்பெற்றிருக்கிறார்கள். இந்த நிபுணர் குழு அறிக்கை அளித்ததும், அதிகபட்ச வேக அளவு நிர்ணயித்து அரசாணை வெளியிடப்படவிருக்கிறது.