சென்னை மற்றும் அனைத்து ஒன்றியங்களிலும் பால் உபபொருட்களின் விற்பனையை அதிகரிக்க வேண்டும்: அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுரை

சென்னை: சென்னை மற்றும் அனைத்து ஒன்றியங்களிலும் பால் உபபொருட்களின் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுறுத்தியுள்ளார். பால், தயிர் மற்றும் பால் உப பொருட்கள் விற்பனையை அதிகரிக்க கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் நேற்று மாலை 3:30 மணி அளவில் விற்பனைப் பிரிவுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பால்வளத்துறை அமைச்சர் சென்னை மற்றும் பிற மாவட்ட ஒன்றியங்களில் உள்ள விற்பனைப் பிரிவு மேலாளர்களுடன் காணொளிக் காட்சி மூலம் கலந்தாய்வு மேற்கொண்டார்.

சென்னை மற்றும் அனைத்து ஒன்றியங்களிலும் பால் உபபொருட்களின் விற்பனையை அதிகரிக்க வேண்டும். மாவட்ட ஒன்றியங்களில் உற்பத்தி செய்யப்படும் பால் உபபொருட்களின் தேவையின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் சந்தைப்படுத்த ஆலோசனை வழங்கினார். மேலும் சந்தையில் நுகர்வோர் விரும்பும் பொருட்கள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை தயார் செய்திட அறிவுறுத்தினார்.

தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான ஆவின் பாலகங்கள் அமைப்பதற்கு பாலக வடிவமைப்பு வழங்கி தொழில் முனைவோரை ஊக்குவித்து ஆவின் பொருட்களின் விற்பனையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூறினார். மேலும் பால் உபபொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை ஆய்வு செய்து தரமான பொருட்கள் நுகர்வோருக்கு கிடைத்திட வழிவகை செய்யுமாறு கூறினார்.

இவ்வாய்வுக்கூட்டத்தில் பால்வளத்துறை இயக்குநர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் சு. வினீத் இ.ஆ.ப., அவர்கள், விற்பனைப் பிரிவு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது