சென்னை : சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளை அகலப்படுத்த மாநகராட்சி திட்டம் வகுத்துள்ளது. ராதாகிருஷ்ணன் சாலை, பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை, நியூ ஆவடி சாலை உள்ளிட்ட சாலைகளை அகலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சாலைகளை விரிவுபடுத்துவதற்காகத் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசு ஒப்புதல் பெற்ற பின் பணிகள் தொடங்க வாய்ப்பு என அதிகாரிகள் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாலை விரிவாக்கம் செய்தால் போக்குவரத்து நெரிசல் பிரச்சனைகள் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.