இந்நிலையில், நிலைத்தடுமாறி பிரேக் அடித்தபோது லாரி பின் பக்கம் மற்றும் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த கார் மீது பைக் வேகமாக மோதியது. இந்த சம்பவத்தில் பைக் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் பயணம் செய்த இருவரும் தூக்கி வீசப்பட்டதில், பைல் ஓட்டிய திருமலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும், படுகாயமடைந்த சுனிலை அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலென்ஸ் உதவியுடன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும், திருவாலங்காடு காவல் ஆய்வாளர் ராஜகோபால், உதவி காவல் ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர் விரைந்து வந்து இறந்த திருமலையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.