சென்னை: சென்னை தியாகராய நகர் வெங்கட் நாராயணன் சாலையில், அரசு பேருந்தின் மீது ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. ஆட்டோ ஓட்டுனர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். சாலையில் சென்று கொண்டிருக்கையில் திடீரென அரசு பேருந்து பிரேக் பிடித்தபோது, பின்னால் வந்த ஆட்டோ எதிர்பாராதவிதமாக பேருந்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.