சென்னை: நடப்பாண்டின் ஐபிஎல் தொடரின் 41வது ஆட்டத்தில் சென்னை – பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்களை குவித்தது. 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது.