சென்னையில் நீச்சல் பயிற்சியாளர்கள் உடன் இருந்தும் பயிற்சியின் போது 7 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

சென்னை: சென்னையில் நீச்சல் பயிற்சியாளர்கள் உடன் இருந்தும் பயிற்சியின் போது 7 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர். சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த குப்தா என்பவரின் மகன் தேஜஸ் பெரியமேடு பகுதியில் உள்ள மைலேடிஸ் நீச்சல் குளத்தில் கடந்த 10 நாட்களாக நீச்சல் பயிற்சி பெற்றுவந்தார். நேற்றுமாலை அவர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது தீடீரென நீரில் மூழ்கினார்.

அவரை மீட்டு உடனிருந்தவர்கள் உதவி அளித்தனர். ஆனால் சிறுவன் மயக்க நிலையிலேயே இருந்ததால் உடனடியாக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதை உறுதி செய்தனர். இரண்டு பயிற்சியாளர்கள் உடனிருந்தும் சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தது. அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு