இந்நிலையில், இன்று ஒரே நாளில் லங்கன் ஏர்லைன்சின் சென்னை-இலங்கை-சென்னை இடையிலான 4 விமான சேவைகளும் திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளன. இவ்விமானங்களில் இலங்கை பயணிகள் மட்டுமின்றி, அதன் வழியே மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் டிரான்சிஸ்ட் பயணிகளும் உள்ளனர். இதற்கிடையே, இன்று லங்கன் ஏர்லைன்சின் வருகை, புறப்பாடு என மொத்தம் 4 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால், அவ்விமானங்களில் வந்து, செல்லவேண்டிய ஏராளமான பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இந்த 4 விமான சேவைகளும் நிர்வாக காரணங்களுக்காக இன்று ஒரே நாளில் திடீரென ரத்து செய்யப்பட்டதாக ஏர்லைன்ஸ் வட்டாரத்தில் தகவல் கூறப்படுகிறது. இதனால் லங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களில் செல்ல வேண்டிய மாற்று விமானங்களில் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.