சென்னை: சென்னையில் பேருந்தின் படிக்கட்டில் பயணித்த பள்ளி மாணவர்களை கீழே இறக்கிவிட்டு தாக்கிய புகாரில் நடிகை ரஞ்சனா கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளி மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டு நடிகை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. மாணவர்களை தாக்கியும், நடத்துநரை தகாத வார்த்தைகளில் பேசியதாகவும் நடிகை ரஞ்சனா மீது புகார் அளிக்கப்பட்டது.