சென்னை: சென்னையின் பிரதான பகுதியில் தனியார் வசம் இருந்த ரூ.500 கோடி மதிப்பிலான 3.54 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. 3.54 எக்கர் நிலத்தை மக்கள் பயன்பாட்டுக்குரிய வகையில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது.