சென்னை: சென்னையில் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் பணிகளை நகராட்சி நிர்வாக கூடுதல் தலைமைச் செயலர் சிவ தாஸ்மீனா ஆய்வு செய்தார். பருவமழைக்கு முன்னதாக அனைத்து பணிகளையும் விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு சிவ் தாஸ்மீனா உத்தரவிட்டுள்ளார். மேலும் முகலிவாக்கம், போரூர், மடிப்பாக்கத்தில் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் பணிகளை சிவ் தாஸ் மீனா ஆய்வு செய்தார். போக்குவரத்துக்கு இடையூறின்றி பணிகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு, சிவ் தாஸ்மீனா அறிவுத்தியுள்ளார்.