சென்னை : சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் தலைமைச் செயலர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் அனைத்துத் துறை உயரதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.பேரிடரை எதிர்கொள்ள சென்னை மாநகரில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.