சென்னை; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக 3 விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. காற்றுடன் கனமழை பெய்வதால் 3 விமானங்கள் தரையிறங்க முடியாமல் சுமார் அரைமணி நேரமாக வானில் வட்டமடித்தபடி உள்ளன. திருச்சி, கொச்சி, மைசூருவில் இருந்து சென்னை வந்த 3 விமானங்கள் தரையிறங்க முடியாமல் உள்ளதால் பெங்களூருவுக்கு திருப்பிவிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.