முறையான அனுபவம் இல்லாத ராட்சத கிரேன் ஆபரேட்டர்களை துறைமுக நிர்வாகம் பணியில் அமர்த்தி உள்ளதாகவும், இதனால் இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை துறைமுகத்தில் 20 அடி நீளமுள்ள கன்டெய்னர் பெட்டியை கையாளும்போது பொக்லைன் இயந்திரம் விபத்தில் சிக்கியது.
ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக சென்னை துறைமுகத்தில் கன்டெய்னர் பெட்டியை கையாளும்போது விபத்து ஏற்பட்டுள்ளதால் துறைமுக நிர்வாக அதிகாரிகள் தலையிட்டு முறையாக பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த ஆபரேட்டர்களை பணியில் அமர்த்த வேண்டும். பெரும் விபத்துகள் ஏற்படும் முன்பு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கன்டெய்னர் லாரி ஓட்டுநர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.