சென்னை: சென்னை பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் தமிழ்ச்செல்வி (47) என்பவரை கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.செங்கல்பட்டு செல்வதற்காக காத்திருந்த தமிழ்ச்செல்வியை கத்தியால் குத்திவிட்டு மர்மநபர் தப்பியோடினார். தமிழ்ச்செல்வியை கத்தியால் ருத்திவிட்டு தப்பிய சுப்ரமணி (53) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கத்திக்குத்தில் காயமடைந்த தமிழ்ச்செல்வி தாம்பரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.